செய்திகள் :

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்!

post image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் கிளை மேலாளர் வேலை பெற்றுத் தர ரூ. 30 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோா் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடர்பாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னா் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல, ராஜேந்திர பாலாஜி சுமாா் 33 பேரிடம் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த ஜன.9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மொழிபெயா்க்கப்பட்ட ஆவணங்களை இரண்டு வாரங்களுக்குள் ஆளுநர் செயலகத்திற்கு வழங்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள அனுமதி குறித்து விரைவான முடிவை எடுக்க ஆளுநர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓரிரு நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!

வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் இருட்டுக் க... மேலும் பார்க்க

நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக... மேலும் பார்க்க

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க