மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் - கேரள இளைஞர்கள் 2 பேர் கைது
வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்திவரப்படுவதாக அம்மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கையும் களவுமாகப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டார் எஸ்.பி விவேகானந்த சுக்லா. அதன்படி, மூன்று மூட்டை கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் பிடிபட்டனர்.

மூன்று மூட்டைகளிலும் சேர்த்து சுமார் 100 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தல்காரர்களான கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தேவன் அலி (வயது 29) மற்றும் சுஜின் (22) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.