செய்திகள் :

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

post image

'அன்புமணி நடைபயணம்..'

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரின் மகனான அன்புமணி ராமதாஸூக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓயவில்லை. அன்புமணி மீது ராமதாஸ் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தன்னுடைய பெயரையே அன்புமணி பயன்படுத்தக் கூடாது என கடுமையாகவும் பேசியிருந்தார்.

'ராமதாஸ் புகார்...'

இந்நிலையில்தான் 'உரிமை மீட்க...தலைமுறை காக்க...' என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அன்புமணி
அன்புமணி

ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.

'அனுமதி மறுப்பு...'

டிஜிபியின் கடிதம்
டிஜிபியின் கடிதம்

100 வது நாளில் தர்மபுரியில் நடைபயணத்தை முடிப்பதுதான் திட்டம். இந்நிலையில்தான் இப்போது அன்புமணியின் இந்த நடைபயணத்துக்கு எந்த மாவட்ட எஸ்.பியும் அனுமதி வழங்கக்கூடாதென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.

BIHAR SIR : 35 Lakhs Voters எங்கே? | ADMK -வின் Question Paper பிரசாரம்! | Imperfect Show 26.7.2025

* மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார் திரெளபதி முர்மு! * Bihar வாக்காளர் பட்டியலில் 35 லட்சம் பேர் காணவில்லையா?* Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட... மேலும் பார்க்க

'பில்கேட்ஸூக்குப் பரிசாக தூத்துக்குடி முத்து; திருச்செந்தூர் முருகர் அருள்!' - பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.மோடிபிரதமர் மோடி பேசியதாவது, 'இன்று கார்கில் வெற்றித் திர... மேலும் பார்க்க

Stalin: ’மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் ஓய்வெடுக்க மனமில்லை..’ - நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

கடந்த திங்கள்கிழமை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.”திமுக-வினர் களத்தில் ஓய்வின்றி பணியாற்றி வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி: ரூ. 4,800 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

மாலத்தீவில் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் இவர், இன்றிரவு தூத்துக்குடியில் ... மேலும் பார்க்க

திடீர் சந்திப்பு; புதிய இணைப்புக்கு தயாராகும் முக்கியப் புள்ளிகள்? - பின்னணி என்ன?

தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் காட்சிகள் வழக்கமானவை. பெரிய கட்சிகள் தங்களின் எதிர் முகாமை பலவீனப்படுத்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களை தங்கள் பக்கமாக இழுக்க தனி வியூகமே வகுப்பார்கள். அந்தவகையில்,... மேலும் பார்க்க