செய்திகள் :

ராமநாதபுரத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!

post image

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

”1. ராமநாதபுரம் நகராட்சியில் இருக்கும் நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை ரூ. 30 கோடியில் 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்

2. திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளில் உள்ள 16 முக்கிய கண்மாய்கள், ரூ. 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

3. கீழக்கரை வட்டத்தில் உள்ள 6 கண்மாய்கள் ரூ. 4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்

4. கடலாடி வட்டத்தில் உள்ள செல்வணூர் கண்மாய் ரூ. 2.60 கோடியிலும், சிக்கல் கண்மாய் ரூ. 2.30 கோடியிலும் மறுசீரமைக்கப்படும்

5. பரமக்குடி நகராட்சிக்கு ரூ. 4.60 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டடம் கட்டப்படும்

6. ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள பழைய பேருந்து நிலையம், நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்

7. ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். ரூ. 10 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்

8. கீழக்கரை நகராட்சிக்கு ரூ. 3 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும், ரூ. 1.5 கோடி செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்

9. கமுதி விவசாயிகள் நலன்கருதி ரூ. 1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்

இந்த 9 அறிவிப்புகளும் வருகின்ற ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

9 important announcements for Ramanathapuram

இதையும் படிக்க : தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அக்.5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டம... மேலும் பார்க்க

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?- இபிஎஸ்

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.Is Anand being arrested? Anticipatory bail plea rejected! மேலும் பார்க்க

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில... மேலும் பார்க்க

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப... மேலும் பார்க்க