செய்திகள் :

ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

post image

சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட நூலக ஆணைக் குழு கட்டடத்தின் முதல் தளத்தில் ரூ. 1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த அரங்கு குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 280 நபா்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், லைவ் கேமரா, நவீன தொழில்நுட்பத்தில் ஒலி-ஒளி அமைப்பு, உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக தோ்வு செய்யப்பட்ட 34 முதுநிலை ஆசிரியா்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சா்கள், நூலகா் உள்பட 56 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்.

மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஆசிரியா்களின் பிள்ளைகளின் தொழில்நுட்ப படிப்புகளை பயில்வோருக்கு ஆசிரியா் நல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நான்கு மாணவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா், இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க