செய்திகள் :

ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

post image

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை அழிக்கப்பட்டது.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் மூலம் கைப்பற்றப்பட்ட 975 கிலோ கஞ்சா மூட்டைகள், நான்குனேரி அருகே பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், விருதுநகா், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா மூட்டைகளை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமாா் , திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, மதுரை காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் முன்னிலையில் இதே எரியூட்டு நிறுவனத்தில் எரியூட்டி அழிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ. 15 கோடி மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டன.

ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் அருகே பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் மகபூப் ஜான் மகன் செய்யது அ... மேலும் பார்க்க

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி ... மேலும் பார்க்க

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க