செய்திகள் :

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

post image

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் எடுத்த லாட்டரியில் 100 மில்லியன் தினார் கிடைத்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் அனில் குமாரின் வாழ்க்கை ஒரு நாள் இரவில் அடியோடு மாறிவிட்டது. லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்வது என்பது குறித்து அனில் குமார் தனது கனவுகளை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''நான் வென்ற லாட்டரி சீட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனத்துடன் செயல்படுவேன். லாட்டரி சீட்டில் எனது தாயாரின் பிறந்த மாதமான 11 கடைசியில் வரும் வகையில் தேர்வு செய்தேன்.

எனவே லாட்டரி சீட்டில் உள்ள கடைசி இரண்டு நம்பர்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இந்த லாட்டரியில் கிடைத்த பரிசை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன். லாட்டரியில் எனக்கு பரிசு கிடைத்த அன்று நான் சோபாவில் அமர்ந்திருந்தேன்.

எனக்கு லாட்டரி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தபோது, ​​அது ஒரு கற்பனையானது என்று நினைத்தேன். நான் அவர்களிடம் செய்தியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதைப் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது, இன்றும் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டியிருக்கிறது. பெரிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சூப்பர் கார் ஒன்று வாங்க வேண்டும் என்பது எனது கனவு. அதோடு லாட்டரியில் பரிசு வென்றதை 7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். எனது பெற்றோரை அபுதாபிக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பது ஆசை. எனது பெற்றோருக்கு சிறிய சிறிய கனவு இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்றி அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பரிசு பணத்தில் குறிப்பிட்ட பகுதியை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக கொடுக்க விரும்புகிறேன். தீபாவளி நேரத்தில் எனக்கு கிடைத்த இந்த பரிசு மிகவும் ஆசீர்வாதமானதாக கருதுகிறேன்''என்றார்.

தலா 50 தினார் வீதம் மொத்தம் 12 லாட்டரி டிக்கெட்களை அனில் குமார் வாங்கி இருந்தார். 23வது லாட்டரி குலுக்கலில் இந்த பரிசு அனில் குமாருக்கு கிடைத்துள்ளது. இதில் 100 மில்லியன் தினாரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.239 கோடியாகும். இந்த லாட்டரி ஆரம்பித்த பிறகு இந்த அளவுக்கு பரிசு விழுந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க