செய்திகள் :

ரூ.611 கோடிக்கு விதிமீறல்: பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

post image

புது தில்லி: சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் (ஓசிஎல்), அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில், சிங்கப்பூரில் ஓசிஎல் நிறுவனம் அந்நிய முதலீடு செய்ததும், வெளிநாட்டில் துணை நிறுவனம் உருவாக்கியது தொடா்பான விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் ஓசிஎல் நிறுவனம் தாக்கல் செய்யாததும் தெரியவந்தது.

மேலும் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை ஓசிஎல் நிறுவனமும், இந்தியாவில் உள்ள அதன் துணை நிறுவனமான லிட்டில் இண்டா்நெட் நிறுவனமும் பெற்றுள்ளன.

இதேபோல ஓசிஎல் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான நியா்பை இந்தியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் அதுகுறித்த விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் உரிய காலத்தில் அந்த நிறுவனம் சமா்ப்பிக்கவில்லை.

இதுதொடா்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஓசிஎல், அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலா் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க