செய்திகள் :

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

post image

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது ஒரு வீட்டிலிருந்து சிலா் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனா்.

அங்கு நடத்திய விசாரணையில், அவா்கள் புது கிராமம் 4-ஆவது தெரு, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த காளிராஜ் மகன் புவனேஸ்வரன் (35), சிந்தாமணி நகா்-2 ஆவது தெருவை சோ்ந்த பாலமுருகன் மகன் செல்லத்துரை (26) என்பதும், கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனா். மேலும் 2 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், கருப்பசாமி என்பவரைத் தேடி வருகின்றனா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க