செய்திகள் :

ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ரோஹித் சர்மா சிறந்த ஆட்டக்காரர் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “ரோஹித் உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். அதேபோல, இந்திய கேப்டன்களில் தகுதியில்லாத கேப்டன் இவர்தான்” என்று பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது பதிவு

அவர் ஒரு சாதாரண வீரர். சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகி விட்டார்” என விமர்சித்தார்.

அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மட்டுமின்றி பாஜகவினரிடமும் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவை ஷாமா நீக்கிவிட்டார்.

இதையும் படிக்க | 2025 ஆஸ்கர் விருதுகள்... முழு பட்டியல் விவரம்!

அவரது இந்தக் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”இதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். இப்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள். இந்திய அரசியலில் தோல்வியடைந்த ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாட வருவார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவினர் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷாமா விளக்கமளித்துள்ளார். அதில், “அது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி குறித்த பொதுவான ட்வீட். உடலைக் கேலி செய்யவில்லை. ஒரு விளையாட்டு வீரர் முழு உடற்தகுதியுடன் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எனவே அதுபற்றி ட்வீட் செய்தேன். எனக்கு அதற்கான உரிமை உள்ளது. அதில் என்ன தப்பு? அதுதான் ஜனநாயகம்” என்று தெரிவித்தார்.

1,090 கோடி டாலராகச் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது. இது குறித்து தொழில் மற்ற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள... மேலும் பார்க்க

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க