செய்திகள் :

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

post image

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார்.

கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய வீரர்களில் அதிவேகமாக பந்தினை வீசி புகழ்ப்பெற்றவர் வரிசையில் மயங்க் யாதவும் ஒருவர். ஆர்சிபிக்கு எதிராக 156.7 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இளம் வீரரான மயங்க் யாதவ் (22 வயது) குறைவான போட்டிகளிலேயே கவனம் பெற்றுவிட்டார்.

காயம் காரணமாக விலகியிருந்த மயங்க் யாதவ் தற்போது மீண்டும் உடல்தகுதி பெற்று அணியில் இணைந்துள்ளார்.

லக்னௌ அணி சிஎஸ்கேவிடம் போதிய அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தோற்றது. அதனால், இவரது வருகை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி... மேலும் பார்க்க

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அற... மேலும் பார்க்க

குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண... மேலும் பார்க்க

ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!

ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியில் 2014- 2021வரை ... மேலும் பார்க்க

தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க