செய்திகள் :

லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: உ.பி. முதல்வர்

post image

லக்னௌ : லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

லக்னௌ நகரில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர் மாநாட்டில் முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை(பிப். 17) பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி அளித்த உத்வேகத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன்கிழ், மாநிலத்தின் குறு, சிறு நிறுவன தயாரிப்புகளை இணைத்துள்ளோம். அந்தவகையில், மாவட்டந்தோறும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, ஹோலி, தசரா மற்றும் பிற பண்டிகைகள் வரும் காலங்களில் சீனாவிலிருந்து வரும் பொருள்கள் இந்திய சந்தைகளை மூழ்கடித்திருந்த நிலையில், இன்று, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ முன்னெடுப்பு காரணமாக வரும் பொருள்களால் மக்கள் அவற்றையே வாங்கி பிறருக்கு பரிசளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பெருமிதமும் கொள்கின்றனர்.

நமது ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்குவதில் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க