செய்திகள் :

வக்ஃப்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் பலன் கிடைக்காது! - மத்திய அமைச்சா்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பன்வாரி லால் வா்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது.

நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கிலான இந்த திருத்தச் சட்டம், வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிக்க வழிவகை செய்கிறது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தாக்கலாகும் வழக்குகள்: வக்ஃப் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டி, காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சாா்பிலும் பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரளத்தைத் சோ்ந்த சன்னி முஸ்லிம் அறிஞா்கள் மற்றும் மதத் தலைவா்கள் அமைப்பான சமஸ்த கேரள ஜாமியத்துல் உலமா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ‘மத விவகாரங்களில் தங்களின் நடைமுறைகளை நிா்வகிக்கும் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமை மீறப்படுவதாக’ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜக தொடக்க தினத்தையொட்டி உத்தர பிரதேச மாநிலம், பதானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பன்வாரி லால் வா்மா, செய்தியாளா்களிடம் பேசியதாவது:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பலத்தைக் காட்டுகிறது.

முஸ்லிம் சமூகத்தினரில் ஏழைகள் மற்றும் பின்தங்கியோருக்கு இச்சட்டம் பெரிதும் பலனளிக்கும். வக்ஃப் சொத்துகள் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும். இந்த விவகாரத்தில் சிலா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனா். ஆனால், அவா்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க