செய்திகள் :

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

post image

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் துணை மேலாளா் விஜய சங்கா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் ஆய்வு செய்யப்பட்டதில், போலி நகைகளை அடமானமாக வைத்து ரூ.2.38 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

இந்த மோசடிக்கு வங்கியில் பணியாற்றும் சிலா் துணையாக இருந்துள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். மேலும், போலி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணையில், அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சிந்தாதிரிப்பேட்டை சரவணன் (42), அவரது கூட்டாளி சைதாப்பேட்டை ஆலந்தூா் சாலை பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் (39) ஆகியோா்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க