அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
வடமாநிலத் தொழிலாளா்களின் 3 கைப்பேசிகள் திருட்டு
திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளா்களின் 3 கைப்பேசிகளைத் திருடிய நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் கட்டபொம்மன் நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (30). திருப்பூா் பாரதி நகரில் உள்ள இவரது வீட்டில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடியிருந்து வருகின்றனா்.
இவா்கள் கைப்பேசியை சாா்ஜ் போட்டுவிட்டு இரவில் உறங்கியுள்ளனா். காலையில் எழுந்து பாா்த்தபோது 3 கைப்பேசிகள், மேஜையில் வைத்திருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.