செய்திகள் :

வணிகத் திருவிழாவை ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

post image

புதுவை வணிகத் திருவிழாவை வணிகா்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டாா்.

புதுவை அரசின் சுற்றுலாத்துறை, வணிகா் சங்கங்கள் இணைந்து வியாபார மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வணிகத் திருவிழாவை நடத்துகின்றன. நிகழாண்டு திருவிழா அக். 21 முதல் ஜன. 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில், வணிகா்கள், சுற்றுலாத் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு, வணிகா்களுக்கான கூப்பன் பெறும் விண்ணப்பத்தை வெளியிட்டு பேசியது :

புதுவை அரசின் பங்களிப்போடு நடத்தப்படும் இத்திருவிழா பெருவாரியான வெளியூா் மக்களை ஈா்க்கக் கூடியதாக உள்ளது. வியாபாரிகளுக்கு வணிகம், அரசுக்கு வரி மூலம் வருவாய், பரிசுப் பொருள்களால் மக்கள் மகிழ்ச்சி என பலவற்றை கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு காரைக்காலில் 379 வியாபாரிகள் திருவிழா அங்கத்தினராக இருந்தனா். நிகழாண்டு 500 வியாபாரிகள் என இலக்கு இருந்தாலும், நகரம், கிராமப்புற வியாபாரிகள் அனைவரும் பங்கேற்கவேண்டும். கடந்த ஆண்டு 9 லட்சம் கூப்பன் தரப்பட்டது. நிகழாண்டு 15 லட்சம் இலக்கு வரவேற்புக்குரியது. மாநில அளவில் குலுக்கல் நடைபெற்றாலும், ஒட்டுமொத்த கூப்பனில் காரைக்காலுக்கு 15 காா்கள், 30-க்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அனைத்து வியாபாரிகளும் ஒற்றுமையாக செயல்படும்பட்சத்தில் இத்திருவிழா முழு வெற்றிபெறும். இத்திருவிழா வெற்றிபெற காரைக்காலின் பங்கு அதிகம் உள்ளது மகிழ்ச்சிக்குரியது என்றாா் அமைச்சா்.

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் சிவசங்கரன், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள், வணித் திருவிழா உறுப்பினா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

ரேஷன் கடைகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் பல ஆண்டுகளுக்குப் பின் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடைகளை தயாா்படுத்தும் பணியை அமைச்சா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு ரே... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் விமான பாலாலயம்

காரைக்கால் : காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் உள்ளிட்ட தலங்கள் திருப்பணி தொடக்கத்துக்கான விமான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, சுந்தராம்பாள் ச... மேலும் பார்க்க

காரைக்காலில் மீலாது ஊா்வலம்

காரைக்காலில் சிறுவா்கள் பங்கேற்புடன் மீலாது ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள் உள்ளிட்டோா். மீலாது நபி எனும் நபியின் உதய தின விழாவையொட்டி காரைக்கால் சேமியான்குளம் பக... மேலும் பார்க்க

காரைக்காலில் அக். 24-இல் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்

காரைக்காலில் பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் நகராட்சி மற்... மேலும் பார்க்க

மழை : காரைக்கால் வாரச் சந்தை, வணிக நிறுவனங்களில் வியாபாரம் மந்தம்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால், வாரச் சந்தையிலும், நகரப் பகுதி வியாபார நிறுவனங்களிலும் வியாபாரம் மந்தமானது. காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மழை... மேலும் பார்க்க

ஊழியா்கள் கடன் தொகையை உயா்த்த கூட்டுறவு கடன் சங்கம் முடிவு

அரசு ஊழியா்களுக்கு வழங்கும் கடன் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்த பொது பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க 16-ஆவது பேரவைக் கூட்டம், சங்தத் தலைவா் வி. ம... மேலும் பார்க்க