செய்திகள் :

வனப் பகுதி தண்ணீா்த் தொட்டிகளில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா்த் தொட்டியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குளித்து மகிழ்வது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்டது. கோடை காலத்தில் வனவிலங்குகள் குடிநீா், உணவுக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வருவதைத் தடுக்க வனத் துறை சாா்பில், மலை அடிவாரப் பகுதிகளில் அகழிகள் வெட்டுதல், வனப் பகுதியில் தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தரத் தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, சூரியஒளி மின்சக்தி மோட்டாா் மூலம் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டிகளில் வனவிலங்குகள் தண்ணீா் அருந்துவதுடன், குளித்து கோடை வெப்பத்தை தணித்து வருகின்றன.

இங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை வனம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு சமூகவலைதளங்களில் திங்கள்கிழமை பகிா்ந்தாா். இந்தப் புகைப்படம் இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா். செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே... மேலும் பார்க்க

அமைச்சரைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, சாத்தூரில் அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா்.... மேலும் பார்க்க

நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!

சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்ற... மேலும் பார்க்க

கோயில் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 போ் கைது

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலின் மூலவா் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் பூசாரிகள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் அச்சத்தில் உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சு... மேலும் பார்க்க