செய்திகள் :

வரம் தரும் வாரம்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 7 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திறமையும் தன்னம்பிக்கையும் வளரும். உடனிருப்போரை ஊக்கப்படுத்துவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். குழந்தைகளால் பெருமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புது நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர் பிறரிடம் கவனமாக இருக்கவும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். சரியான நேரத்தில் ஆகாரத்தை உண்பீர்கள். தொழிலில் தடைகளை முறியடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் அதிக வருவாய் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் உபாதைகளால் சஞ்சலம் அடைவீர்கள். மாணவர்கள்

படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். முயற்சிகள் பலனளிக்கும். நேர்வழியில் செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் வரப்பு விவகாரங்களில் முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு உண்டு. பெண்கள் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் விருப்பப்பட்ட துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நண்பர்களின் ஆதரவைத் தக்க வைப்பீர்கள். தோற்றத்தில் பொலிவும் உடல் வலிமையும் கூடும். புதிய வீடுகளுக்கு மாறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகள் வருவாயைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவருடன் சகஜமாக பழகுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

கடினமாக உழைப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கடன்கள் வசூலாகும். போட்டியும், பொறாமையும் குறையும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வெளியூரில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தவாறு செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் கண்காணிப்பு இருக்கும். கலைத் துறையினர் சோம்பேறித்தனத்தை விட்டொழிக்கவும். பெண்கள் உறவினர்களிடம் கவனமாக இருக்கவும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சுபச் செய்திகள் கிடைக்கும். ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக இருக்கவும். வியாபாரிகள் தரமான பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தக்கவாறு செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் அமைதியைத் தக்க வைப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். உறவினர்களைப் புரிந்துகொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் திறம்பட செயல்படுத்துவீர்கள். உடனிருப்போருக்கு ஆலோசனைகளை அளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புகழ் கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். விவசாயிகள் மகசூலை அதிகரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் மதிப்பெண்களைக் கூட்டிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 7.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் உண்டு. வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சமமான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றி பெறும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற தாமதமாகும். பெண்கள் கணவரிடம் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்} பிப்ரவரி 8, 9.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பேச்சினால் பிறரை கவர்வீர்கள். வருவாய்க்குக் குறைவிருக்காது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பிறருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் இருப்பார்கள். வியாபாரிகள் சரக்கு வாகனங்களுக்கு செலவழிப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பதவிகளால் புகழ் பெறுவீர்கள். கலைத் துறையினர் உதவிகளைப் பெற சிரமப்படுவீர்கள். பெண்கள் நன்கு யோசித்து முடிவெடுக்கவும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கவும்.

சந்திராஷ்டமம்} பிப்ரவரி 10, 11, 12.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

ஆன்மிகப் பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்ப்பால் பாதிக்கப்பட மாட்டீர்கள். எளியவர்களுக்கு உதவுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திருப்தியாகச் செய்வீர்கள். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு அளிப்பார்கள். கலைத் துறையினருக்கு வருமானம் வருவதில் தாமதமாகும். பெண்கள் வீண்பேச்சைத் தவிர்க்கவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 13.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். வசதிகளைப் பெருக்குவீர்கள். முக்கிய பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வெகுமதி உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனமாகப் பழகவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பாராத பயணங்களைச் செய்ய நேரிடும். கலைத் துறையினர் பிறரிடம் கவனமாகப் பழகவும். பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம், மனவளம் சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் உறுதியுடன் இருப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பிள்ளைப் பேறு கிடைக்க...

யமுனை நதிக்கரையில் வேதபுரத்தில் கருத்தமன் என்ற முனிவர் பிள்ளைப் பேறு இல்லாமல், சிவனை பிரார்த்தித்தார். குழந்தை பிறந்தபோது, "புண்டரீகர்' எனப் பெயரை முனிவர் சூட்டினார். பல்வேறு இடங்களில் உள்ள சிவத் தலங்... மேலும் பார்க்க

குறைகள் தீர....

சோழ மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட குறை நீங்க, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் பலன் கிட்டவில்லை. அவரது கனவில் திருமால் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருவூரகப் பெருமாளாக அருள் செய்வதாகவு... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும்...

அசுரர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க, பரிகாரம் கேட்டார் முருகன். அப்போது, "கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்பீர்கள். முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உத்தியோகஸ்... மேலும் பார்க்க

மகப்பேறு அருளும் மாசாணியம்மன்!

ஆனைமலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நன்னன் என்ற பெயர் கொண்ட மன்னர்கள் ஆண்டனர். இரண்டாவது நன்னனின் காவல் மரம் மாமரம். எனவே உப்பாற்றங்கரையின் மாந்தோப்புகளில் மாங்கனியை சாப்பிடக் கூடாது என ஆணையிட்டிருந்... மேலும் பார்க்க

பலன் தரும் 11 கருடசேவை

சிவனை அழைக்காமல் யாகம் செய்த தட்சனுக்கு அறிவுரை கூற சென்றபோது, பார்வதி இகழப்பட்டாள். சினமுற்ற பார்வதியோ யாகத்தை அழிக்க, சிவன் சீற்றத்துடன் உபயகாவேரி மத்திமத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சடாமுட... மேலும் பார்க்க