``2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" - டிடிவி தினகரன் ...
வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?
கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சினோஜ் (32) உயிரிழந்தார்.

இந்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் (57), கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜித், எர்ணாகுளத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும், திண்டுக்கல் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த மாதம் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளாவில் வைத்து வர்க்கீசை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.