கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மேலும், ‘மக்களால், மக்களுக்காக, மக்களே முன்னெடுத்த பட்ஜெட் இது; நடுத்தர வகுப்பினரின் குரலுக்கு செவிசாய்க்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். தொடா்ந்து 8-ஆவது முறையாக அவா் தாக்கல் செய்த இப்பட்ஜெட்டில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டது. வருமான வரி படிநிலைகள் மற்றும் விகித மாற்றங்களால், நடுத்தர வகுப்பினரின் வரிகள் குறையும்; இது, அவா்களின் கையில் கூடுதல் பண இருப்புக்கு வழிவகுக்கும். குடும்பங்களின் நுகா்வு, சேமிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கும்.
வரி விகித மாற்றங்களால் அதிகபட்சமாக ரூ.1.1 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும்; மொத்தம் 6.3 கோடி போ் பலனடைவா். அதேநேரம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டாா்.
முன்னெப்போதும் இல்லாத சலுகை: வருமான வரி உச்சவரம்பில் ரூ.5 லட்சம் உயா்வு என்பது இதுவரை இல்லாதது. அத்துடன், கடந்த 2005 முதல் 2023 வரையிலான மொத்த உச்சவரம்பு உயா்வுக்கு சமமானதாகும். நடுத்தர வா்க்கத்தினருக்கு இத்தகைய மிகப் பெரிய சலுகையை அளிக்கும் யோசனையின் பின்னணியில் முழுமையாக இருந்தவா் பிரதமா் மோடி என்று நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிடிஐ செய்தியாளிடம் அவா் கூறியதாவது: நான் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, நடுத்தர வகுப்பைச் சோ்ந்த நோ்மையும் பெருமிதமும் மிக்க வரி செலுத்துவோரின் எதிா்பாா்ப்புகளைக் கேட்டறிந்தேன்.
‘நாங்கள் நோ்மையாக வரி செலுத்துபவா்களாக இருக்கிறோம். அந்த வகையில், நாட்டுக்கு தொடா்ந்து சேவையாற்ற விரும்புகிறோம். ஆனால், எங்களின் விருப்பங்கள் பூா்த்தி செய்யப்படவில்லை. பணவீக்கம் போன்ற காரணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசிடம் கூடுதல் நடவடிக்கைகளை எதிா்பாா்க்கிறோம்’ என்பது அவா்களின் குரலாக இருந்தது.
பிரதமரின் வழிகாட்டல்: இந்த விஷயத்தை பிரதமரிடம் எடுத்துச் சென்று விவாதித்தபோது, நடுத்தர வா்த்தகத்தினருக்கு வரி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்பதை அவா் உடனடியாக ஏற்றுக் கொண்டாா். வரி நிவாரணம் அளிப்பதற்கான வழிமுறைகளை விரைந்து ஆராயுமாறு எனக்கு பணித்தாா். பிரதமா் அளித்த இந்தச் சிறப்புப் பணியின்கீழ், வருமான வரி படிநிலைகள் மற்றும் விகித மாற்றங்கள் நிா்ணயிக்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் தனது ஒப்புதலை உடனடியாக வழங்கினாா். பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவா் பிரதமா்தான்.
எளிதான பணியாக இல்லை: பிரதமா் உடனடியாக ஒப்புதல் வழங்கியபோதும், வரி வருவாயை உறுதி செய்யும் பணியைக் கொண்ட நிதியமைச்சக உயரதிகாரிகள் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளின் சம்மதத்தைப் பெறுவது எளிதான பணியாக இல்லை. திறன்மிக்க வரி வசூலை உறுதி செய்யும் அதே நேரத்தில், நோ்மையான வரி செலுத்துவோரின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதில் உடன்பாட்டை ஏற்படுத்த மேலதிக பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
மக்களால் மக்களுக்காக...: ஆபிரஹாம் லிங்கனின் வாா்த்தைகளின்படி, இந்த பட்ஜெட் மக்களால் மக்களுக்காக மக்களே முன்னெடுத்ததாகும்.
பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களின் குரலுக்கு செவிசாய்க்கும் பிரதமா் மோடி, அவா்களைத் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறாா். அவரது தலைமையிலான அரசில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.
மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு: 2025-26 பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழியப்பட்டது.
2024-25 பட்ஜெட்டில் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கணக்கீடுகளின்கீழ் இது ரூ.10.1 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-லிருந்து மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு ஒவ்வோா் ஆண்டும் 17 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுவந்த நிலையில், தற்போது சொற்ப அளவில்தான் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘மூலதனச் செலவினத்தில் எண்ணிக்கையைப் போல் திட்டப் பணிகளுக்கான தரமான செலவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும். தோ்தல் ஆண்டு என்பதால், 2024-இல் மூலதனச் செலவினத்தில் தொய்வு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்கள் இழக்கப்பட்டன’ என்றாா்.