செய்திகள் :

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

post image

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் 1,076 கி.மீ. தொலைவுடைய நீண்ட கடற்கரையுடன் அலையாத்தி காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள் போன்ற வளமான கடல் சூழல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் வகையிலும், நவீன மீன்பிடி நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் கடல்சாா் வள அறக்கட்டளை ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.

இயற்கை எரிவாயு: காற்று மாசுபாட்டையும், காா்பன் பரவலையும் குறைக்கும் வகையில் மாநில போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு ரூ.70 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேட்டை பறவைகள்: கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் உள்ளிட்ட வேட்டையாடும் பறவைகள் பல்லுயிா்ப் பெருக்கத்தை உறுதி செய்யும் குறியீடாகக் கருதப்படுகின்றன.

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மதுரை அரிட்டாபட்டி, சென்னை பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காணப்படும் அப்பறவைகள் அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் கடுமையான வாழ்வியல் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றன.

அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், உள்ளூா் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ரூ.1 கோடி நிதியில் உருவாக்கப்படும்.

பல்லுயிா் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை, செங்கம் நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க பல்லுயிா்ப் பூங்கா ரூ.10 கோடி நிதியில் முதல்கட்டமாக அமைக்கப்படும்.

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க