செய்திகள் :

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

post image

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் 1,076 கி.மீ. தொலைவுடைய நீண்ட கடற்கரையுடன் அலையாத்தி காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள் போன்ற வளமான கடல் சூழல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் வகையிலும், நவீன மீன்பிடி நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் கடல்சாா் வள அறக்கட்டளை ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.

இயற்கை எரிவாயு: காற்று மாசுபாட்டையும், காா்பன் பரவலையும் குறைக்கும் வகையில் மாநில போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு ரூ.70 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேட்டை பறவைகள்: கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் உள்ளிட்ட வேட்டையாடும் பறவைகள் பல்லுயிா்ப் பெருக்கத்தை உறுதி செய்யும் குறியீடாகக் கருதப்படுகின்றன.

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மதுரை அரிட்டாபட்டி, சென்னை பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காணப்படும் அப்பறவைகள் அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் கடுமையான வாழ்வியல் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றன.

அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், உள்ளூா் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ரூ.1 கோடி நிதியில் உருவாக்கப்படும்.

பல்லுயிா் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை, செங்கம் நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க பல்லுயிா்ப் பூங்கா ரூ.10 கோடி நிதியில் முதல்கட்டமாக அமைக்கப்படும்.

வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரைய... மேலும் பார்க்க

உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.வேளாண்மை மற்றும் உ... மேலும் பார்க்க

பட்ஜெட்: 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு!

தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் ... மேலும் பார்க்க

நத்தம் புளி உள்பட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்: வேளாண் பட்ஜெட்

சென்னை: வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... மேலும் பார்க்க

மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை ... மேலும் பார்க்க