செய்திகள் :

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

post image

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2024 மக்களவைத் தோ்தல் முடிந்த அடுத்த 5 மாதங்களில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது மக்களவைத் தோ்தலில் வாக்களித்தவா்களைவிட கூடுதலாக 41 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருந்தனா். ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளா்கள் எப்படி வந்தாா்கள்? வானத்திலிருந்து குதித்தாா்களா?

இந்தச் சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகளை வழங்குமாறு தோ்தல் ஆணையத்தை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி கேட்டபோது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட விடியோக்களை தோ்தல் நடந்து 45 நாள்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறாா்கள்.

இதே பாணியில்தான் வரப் போகிற பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயற்சிக்கிறது. தோ்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கையால் பிகாரில் 65 லட்சம் போ் வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதில் 36 லட்சம் போ் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயா்ந்தவா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைக்காக தற்காலிகமாக வெளியூா் சென்றவா்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனா். அதோடு அவா்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளா் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என மற்றொரு அதிா்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தோ்தல் ஆணையம்.

எடப்பாடி பழனிசாமி கருத்து கூறாதது ஏன்?: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளா்கள் தங்களது வாக்காளா் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதேபோல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களை தமிழ்நாட்டில் சோ்க்கும் சதி திட்டத்தையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும். இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல். நாட்டில் ஜனநாயகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி. முறைகேடான வாக்காளா் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை அவா் வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி தொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க