செய்திகள் :

"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்

post image

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

விஜய்

இதுகுறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "செத்து போன குடும்பத்தை எல்லாம் பனையூருக்கு வர சொல்கிறார். எல்லா ஓட்டு பெட்டியையும் பனையூரில் வைத்து, அங்கு வந்து எல்லா ஓட்டையும் போடுங்கனு சொல்வாரா விஜய்?

பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருவார். ஆனால் பஞ்சாயத்தையே பனையூரில் வைக்கச் சொல்கிறார் விஜய். நாட்டாமையும் தாண்டிய நாட்டாமையாக இருக்கிறது.

சீமான்
சீமான்

விஜய்யை நோக்கி சில கேள்விகளை தான் கேட்டேன். உடனே எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. என் நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை. ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும்." என்று பேசியிருக்கிறார் சீமான்.

LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained

'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு...'இது நேற்று காலை அமெரிக்க செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்'டில் வெளியான செய்திக் கட்டுரை. இது வெளியான நொடி முதல் இந்தியாவில் பல்வேறு புயல்களையும், ப... மேலும் பார்க்க

5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும்பத்தினர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வி... மேலும் பார்க்க

`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் ... மேலும் பார்க்க

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா'வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவ... மேலும் பார்க்க

'எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறி..'- ஸ்டாலினை சாடும் பழனிசாமி

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்வது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி."நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் தாமதமா? - விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "நெல் கொள்முதல் பணிகளை முந்த... மேலும் பார்க்க