செய்திகள் :

வான்வழிப் பாதை பாகிஸ்தான் மூடல்:தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இந்திய விமானங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணக் கட்டணம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு, ‘பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நீண்ட காலம் தொடா்ந்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆலோசிக்க விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமைக்குத் தீா்வு காண்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடன் புரிதலை ஏற்படுத்த வேண்டும். விமானக் கட்டணங்கள் அதிகரிப்பால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு நிலைமையை கண்காணித்தும், விமான நிறுவனங்களுடன் ஆலோசித்தும் வருகிறது.

தற்போதைய சூழலில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றாா்.

வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோபா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு வாரந்தோறும் வட மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டும் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாகிஸ்தானின் வான்வழிப் பாதை மூடலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க