செய்திகள் :

வாராந்திர பணி நேரத்தை 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

post image

புது தில்லி: வாராந்திர பணி நேரத்தை 70 முதல் 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணியாளா்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவன தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்தாா்.

அவரைத் தொடா்ந்து பணியாளா்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியும், 8 மணி நேரத்துக்கு மேல் ஒருவா் வீட்டில் இருந்தால், அவரின் மனைவி பிரிந்து சென்றுவிடுவாா் என்று அதானி குழும தலைவா் கெளதம் அதானியும் தெரிவித்தனா்.

அவா்களின் கருத்துகளுக்கு மஹிந்திரா குழும தலைவா் ஆனந்த் மஹிந்திரா, ஐடிசி நிறுவன தலைவா் சஞ்சீவ் புரி உள்பட ஏராளமானோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில், பணி நேரத்தை உயா்த்துவது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘வாராந்திர பணி நேரத்தை 70 முதல் 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

தொழிலாளா் விவகாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்பட்டவையாகும்’ என்றாா்.

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க

வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!

தெலங்கானாவில் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர் நாளை புனித நீராடல்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை (பிப். 10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார். மேலும் பார்க்க