செய்திகள் :

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

post image

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 6.4ஆவது ஓவரினை ஜீசன் அன்சாரி வீசும்போது மும்பை பேட்டர் ரியால் ரிக்கல்டன் அடித்த பந்தினை பாட் கம்மின்ஸ் கேட்ச் பிடிப்பார்.

ஆட்டத்தில் முக்கியமான விக்கெட்டாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் நடுவர் நோ பால் என அறிவிப்பார். பந்துவீச்சாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக இந்தமுறை கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் தரப்பட்டுள்ளது.

பந்து வீசும்போது விக்கெட் கீப்பர் பந்தினை ஸ்டம்புக்கு முன்பாக பிடிக்கக் கூடாது. இது பொதுவாக ஸ்டம்பிங் செய்யும்போது சோதிப்பார்கள். ஆனால், ஆட்டத்தில் பந்துவீசும்போது ஸ்டம்பிங் இல்லாவிட்டாலும் இதைப் பரிசோதிப்பார்களென ஐபிஎல் ரசிகர்களுக்கு நேற்றுதான் தெரிய வந்துள்ளது.

எம்சிசியின் 27.3ஆவது விதியின்படி பந்து பேட்டில் படும்வரை அல்லது ஸ்டம்பினை தாண்டும்வரை கீப்பரின் கையுறை ஸ்டம்பிற்கு பின்புறம் மட்டுமே இருக்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த தவறினால் விக்கெட் இழப்பு மட்டுமில்லாமல் நோ பாலும் கொடுக்கப்பட்டது.

பின்னர், இறுதியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203/8 ரன்கள் எடுத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தில்லி வீரர்கள் யாருமே அர... மேலும் பார்க்க

சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி... மேலும் பார்க்க

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அற... மேலும் பார்க்க

குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண... மேலும் பார்க்க

ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!

ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியில் 2014- 2021வரை ... மேலும் பார்க்க