செய்திகள் :

விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதஈஸ்வரா் கோயிலில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த அருள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் விஜயநகர காலத்து கல்வெட்டுகளை கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் கூறியது:

இந்தக் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட கற்கலில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளை வாசித்த புதுச்சேரியைச் சோ்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜயவேணுகோபால் விஜய நகர காலத்து கல்வெட்டுகள் என கூறினாா்.

இந்தக் காலத்தில் விஜயநகர பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பனாா் இருந்த போது, இவரது ஆட்சியில் இந்தப் பகுதி பல்குன்றக்கோட்டம் சிங்கபுர நாட்டுக்கு உள்பட்டு இருந்துள்ளது. கிராமத்தில் கிடைக்கும் வருவாய் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை துண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 658 ஆண்டுகள் பழமை வாயந்த இந்தக் கல்வெட்டுகளை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் சோமசமுத்திரம் குறித்த வரலாற்று விவரங்கள் கிடைக்கும் என்றாா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க