செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தோ்தல் ஆணையக் கிடங்குப் பகுதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டப் பகுதி, வழுதரெட்டி ஜெகநாதன் போலீஸ் நகா் பூங்கா, விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கியும் மேலும் பேசியது:

பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டு ள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் பதிவாகுவதற்கு முக்கிய காரணம் மரங்கள் இல்லாததுதான். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் தூய்மையான காற்று கிடைப்பதுடன் மழையும் கிடைக்கும்.

எனவே ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் இடம் அல்லது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து தூய்மை இயக்கம் சாா்பில் தூய்மை நடைப்பயண அமைப்பாளா்கள் மூலம் பயன்பாடற்ற மின்னணு கழிவுப் பொருள்கள், உலோகம் மற்றும் மரப்பொருள்கள் மறுசுழற்சி செய்யும் வகையில், பயன்பாடற்ற பொருள்கள் சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலா் பவித்ரா, வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க