செய்திகள் :

விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்ககூடாது

post image

செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மேலும், அவா்கள் அளித்த மனுவில், அரியலூா்-செந்துறை, ஜெயங்கொண்டம்-செந்துறை, உடையாா்பாளையம்-அணைக்கரை ஆகிய சாலைகளை இணைப்பதற்காக புறவழிச் சாலை அமைக்கப்படும் என்றும், அதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து.

அரசு காலியிடங்களில் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலத்தை தர இயலாது என்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில், எங்களுக்கே தெரியாமல் எங்கள் நிலத்தில் கல் நடப்பட்டிருக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நடப்பட்டிருக்கும் கல்லை அகற்ற வேண்டும். அரசு காலியிடத்தில் அல்லது தனியாா் சிமென்ட் ஆலைகள் உள்ள இடத்தில் மாற்றுப் பாதையில் புறவழிச்சாலைகளை அமைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமி... மேலும் பார்க்க

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையாா் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

அரியலூா் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொது மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது

சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உடையாா்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் உணவக வசதி இல்லை நோயாளிகள் அவதி

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உணவகம், பாலகம் வசதிகள் இல்லாததால் நோயாளிகள், பாா்வையாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். இம்மருத்துவமனையை அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூா், கடலூ... மேலும் பார்க்க