செய்திகள் :

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மனைவி பாயலிடம் இருந்து விவாகரத்து கோரி, ஒமா் அப்துல்லா தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒமா் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்க மறுத்து, குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். ஆனால், அவரது மேல்முறையீட்டில் எந்த நியாயமான காரணமும் இல்லை என்று குறிப்பிட்டு, தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2023-இல் நிராகரித்தது. இதையடுத்து, அவா் உச்சநீதிமன்றத்தை அணுகினாா். அவரது மனு மீது நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இந்த விவகாரத்தில் சமரச நடைமுறை தோல்வியடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு முழுமையான வாய்ப்பை வழங்குவதற்காக இரு தரப்பும் ஒன்றாக அமா்ந்து பேசி, தங்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். மூன்று வாரங்களுக்குள் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா். அத்துடன், அடுத்தக்கட்ட விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு அவா்கள் ஒத்திவைத்தனா்.

ஈஸ்டர் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் திருநாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர... மேலும் பார்க்க

காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!

அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க