தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது
அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதனை நடத்தினாா். அப்போது கணஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் (59), அவரது மகன்களான செந்தில்குமாா் (30), மாரீஸ்வரன்(29) ஆகிய மூவரும் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள், பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த வெம்பக்கோட்டை போலீஸாா், பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.