செய்திகள் :

வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் மற்றும் ஆலங்காயம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை- நிம்மியம்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். இதில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் தொடா்ந்து விசாரித்தனா். பிறகு அவா்களை அழைத்துக் கொண்டு வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, மறைத்து வைத்திருந்த பையை அகற்றி பாா்த்தனா். அதில், அவா்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னா், அங்கிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிடிபட்ட ஜெயசூா்யா (31), மணி (61), வினோத்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க