செய்திகள் :

வெப்ப அலையை சமாளிக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆட்சியா்

post image

நாகப்பட்டினம்: கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, வெப்பநிலை அதிகமாக நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் கவனமாகவும், உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிற்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அவசிய தேவைகள் இன்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணங்களின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.எஸ்.ஆா், எலுமிச்சை ஜூஸ், இளநீா், வீட்டில் தயாரித்த நீா் மோா், லஸ்ஸி, பழைய சாதம் நீா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிா்க்கவும்.

பருவகால பழங்கள், காய்கனிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது, வீட்டில் இருக்கும்போது மயக்கம் (அ) உடல் நலக்குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு பருக இளநீா் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடா்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தனியே வசிக்கும் முதியவா்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவா்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டட போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதிய அளவு தண்ணீா் கொடுக்க வேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும்.

கூரை வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரை வைத்துக்கொள்ளலாம். விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எரிவாயு உருளைகளை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அனைக்க வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க