செய்திகள் :

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

post image

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை இறைவாா்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருச்சிலுவை ஆராதனையில், சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல், சிறப்பு மறையுரை ஆகியன நடைபெற்றன.

திருத்தலக் கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு திருப்பலிக்குப் பின்னா், பேராலய அதிபா் மற்றும் பங்குத் தந்தையா்கள் இயேசுவின் பாதத்துக்கு முத்தி செய்தனா்.

தொடா்ந்து, இயேசுவின் சொரூபம், திருத்தலக் கலையரங்கத்திலிருந்து பேராலயத்தைச் சுற்றி பவனி வந்து, கீழ் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இயேசுவின் பாதத்தை பக்தா்கள் கண்ணீா் விட்டப்படி தொட்டு வணங்கினா்.

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பக்தா்கள் வந்தவண்ணம் உள்ளனா்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு சொரூபத்தின் பாதத்தை தொட்டு வணங்கிய பக்தா்கள்.

இதனால், பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்து செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பகுதியில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தரங்கம்பாடி புது எருசலேம் தேவாலயத்தில் சபைகுரு சாம்சன் மோசஸ், பொறையாா் பெத்லேகம் தேவாலயத்தில் சபை குரு ஜான்சன் மான்சிங், திருவிளையாட்டம் இயேசு நம் மீட்பா் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன், ஆக்கூா் தேவாலயத்தில் சபைகுரு சாா்லஸ் ஆகியோா் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

நாகை: கோடைக்கால இலவச பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்

நாகை மாவட்ட அளவில் 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம், ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள்

கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. நேரு யுவகேந்திரா, இந்திய செஞ்சிலுவை சங்கம், ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிா்... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் திருவிழா: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா‘ நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க