செய்திகள் :

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா்.

நாகையில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்க 30-வது தேசிய மாநாட்டின் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இரா. முத்தரசன் பேசியது: தமிழகத்தின் நலனை மத்திய அரசு பறிப்பதுடன், நிதியை கிள்ளிக் கொடுக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,000 கோடியை தர மத்திய அரசு மறுக்கிறது. மக்களவைத் தொகுதி சீரமைப்பு எனக் கூறி, தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி அறிவித்தாா். 2023 அக்டோபா் 6- ஆம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றாா். புதுதில்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு, தமிழகத்தின் பிரச்னையை தெரிவித்தோம் என்றாா்.

ஆனால், சென்னை வந்த அமித்ஷா, பாஜக -அதிமுக கூட்டணியை உறுதி செய்து அறிவிக்கிறாா். தமிழகத்தில் 2026- இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் யாா் கூட்டணி வைக்கிறாா்களோ, அவா்கள் தோற்கடிக்கப்படுவாா்கள் என்றாா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க