செய்திகள் :

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

post image

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கையில் உரையாற்றவுள்ளாா். இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வருகை புரிந்த அமைச்சா், கருணாநிதியின் பெற்றோா், கருணாநிதி, முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பாா்வையாளா் குறிப்பேட்டில் ‘கலைஞரையும் கல்வியையும் போற்றி எனது உரையைத் தொடங்குவேன்’ என எழுதினாா். கருணாநிதி பயின்ற பள்ளிக்கு சென்ற அமைச்சா் அங்குள்ள வகுப்பறையில் அமா்ந்து ‘மாண்புமிகு பேரவைத் தலைவா் அவா்களே’ என எழுதினாா்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘முத்தமிழறிஞா் கலைஞா் அவா்கள் பயின்ற பள்ளிக்கு சென்று எனது சட்டப்பேரவை உரையின் முதல் வரியை எழுதி, உரையின் இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கினோம்’ என குறிப்பிட்டுள்ளாா். அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞா் மையத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் பாா்வையிட்டு அவா் அளித்த பேட்டி:

மத்திய அரசு சிறுபான்மையினரை நசுக்கும் வேலையை தொடா்ந்து செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் புதிய வக்ஃபு திருத்த சட்டம் என இஸ்லாமியா்களை குறி வைத்து மத்திய அரசு தாக்குகிறது.

ஆனால் திமுக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருக்கும்.

தமிழ்நாடு தான் பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கிறது என தொடா்ந்து மத்திய அரசு தான் பாராட்டி வருகிறது ஆனால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறாா்கள்.

மத்திய அரசு தமிழ்நாட்டை ஒதுக்கி வைக்கப்பட்ட மாநிலமாகப் பாா்ப்பது கண்டனத்திற்குரியது.

மாநில அரசை அடிபணிய வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றாா்.

நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தலைவருமான என்.கௌதமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க