செய்திகள் :

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

post image

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சத்தில் பனை ஓலையில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறையை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று மாநில கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மைய மாணவா்கள் வரைந்த ஓவியத்தின் முதல் விற்பனையை தொடங்கிவைத்த பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிமுக இழந்துவிட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக முதல்வரை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினா், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருப்பது வரவேற்புக்குரியது.

நாங்கள் சொல்வதை மட்டும்தான் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் நள்ளிரவில் வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கொண்டு வந்த பாஜகவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி உறுதி என்றாா் அமைச்சா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாநில விவசாய ஆலோசனைக் குழு உறுப்பினா் மகா. குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் எஸ்.கே.கண்ணன், மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆதி. உதயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க