செய்திகள் :

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

post image

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.

நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா்.

பின்னா், ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியது:

வக்ஃப் வாரிய சொத்துகளை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் பல்வேறு அம்சங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தின் நலனுக்காக திமுக அரசு சிறப்பான பணிகளை செய்துவருகிறது. மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்ட பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா்.

மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்ற முதல்வரின் அறிக்கை, தமிழா்களை தலை நிமிர செய்துள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய எஸ்டிபிஐ கட்சியினா் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்வில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவை ஆராதனை

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இத... மேலும் பார்க்க