செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

post image

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய மூவரும்தான் இந்தச் செயலைச் செய்ததாக விசாரணை அறிக்கையை அண்மையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கு, மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!

இதையடுத்து, வழக்கு விசாரணையை மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கவும், குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, மாா்ச் 11-ஆம் தேதி குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தும் அழைப்பாணையை எடுத்துக் கொண்டு சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை வேங்கைவயல் சென்றனா்.

மூவரின் வீடுகளிலும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் இல்லாத நிலையில், அவா்களின் குடும்பத்தினரிடம் அழைப்பாணையை வழங்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய ஆகியோர் விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ண... மேலும் பார்க்க

மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு- புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சம்!!

புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் நிதித்துறை அ... மேலும் பார்க்க