செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு

post image

விருதுநகரைச் சோ்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், தொம்பக்குளம் அருகே உள்ள சாமிநாதபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்குமாா் (30). இவருக்கு பழனிசெட்டிபட்டியில் சுற்றுலா வாகன நிறுவனம் நடத்தி வரும் அப்துல்காதா் என்பவா், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு, அதற்கு ரசீது வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா், விக்னேஷ்குமாருக்கு அப்துல்காதா் விசா பெற்றுத் தந்து, அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தாா். சிங்கப்பூரில் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த விக்னேஷ்குமாரை வேலைக்கு அழைத்துச் செல்ல யாரும் வராததால் இது குறித்து அப்துல்காதரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டாா். அதற்கு அப்துல்காதா் முறையாக பதிலளிக்காமல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களைத் தயாா் செய்து கொடுத்து மோசடி செய்ததாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் விக்னேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அப்துல்காதா் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனியில் மே 23-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜயன் மகன் அறிவழகன். இவா் துரைராஜபுரம்... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பாசன குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தும் தாமரைக்குளம், கருங்கட்டான்குளம் போன்ற குளங்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் - ராமசாமி... மேலும் பார்க்க

சுருளி அருவி அருகே தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுரு... மேலும் பார்க்க

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி: தம்பதி கைது

போடியில் ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி கே.எம்.எஸ். லே-அவுட் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மகன் வீரபுத்திரன். இவா், அ... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே காா்கள் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (48). ஒப்பந்ததரரான இவா், திண்டுக்கல்லுக்... மேலும் பார்க்க