செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

post image

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும் ஜம்மு-காஷ்மீரில் உரி, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த 16 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பகுதிகளில் உள்ள மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்தும் வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். அரசு தங்களின் வருமானத்திற்கு உதவ வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரைச் சந்தித்துப் பேசினார். வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் தைரியத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் துணை நிற்கும்.

இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க