Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளம் அறிவியல் வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கும் சேர விரும்பும் மாணவா்கள் ஒரே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கினால் போதுமானது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்லூரிகளில் மொத்தம் 6,921 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 340 இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த மே 9 -ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பிக்க ஜூன் 8 -ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் 2- ஆம் தேதி வரை பட்டப் படிப்புகளுக்கு 31,545 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவா்கள், பெற்றோா்களின் வேண்டுகோளுக்கு இணங்க பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பிக்க பல்கலைக்கழகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16 -ஆம் தேதி வரை வழங்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.