Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா
திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.
இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது.
வியாழக்கிழமை இரவு விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்திலும், முருகப் பெருமான் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் கேடக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
தொடா்ந்து, ஆதிரெத்தினேஸ்வரா், சினேகவல்லி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.