செய்திகள் :

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

post image

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.

தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ நிறுவனம், வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியதுதான் அல்ட்ராவயலட் நிறுவனம்.

இது தற்போது மின்னணு ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் ஆர்வம்காட்டி வருகிறது. அதன்படி, கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ஸராக்ட் அறிமுக விலை ரூ.1.20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விலை முதல் 10 ஆயிரம் முன்பதிவாளர்களுக்கு மட்டுமே என்றும், அதன் பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கான விலை ரூ.1.45 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, ஷாக்வேவ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இ-பைக் அறிமுக விலை ரூ.1.43 லட்சம். இது முதல் 1000 பயனர்களுக்கு மட்டுமே. முன்பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியிருந்தாலும் வாகனங்கள் முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில்தான் ஒப்படைக்கப்படவிருக்கிறதாம்.

டாடா மோட்டார்ஸ் - ஸோஹோ கார்ப்பரேஷன் முதலீட்டாளர்களாக இருக்கும் அல்ட்ராவயலட் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த இ-பைக்குகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 261 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!

இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிற... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்க... மேலும் பார்க்க

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் ... மேலும் பார்க்க

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும்... மேலும் பார்க்க

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க