தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் கற்றான்குளம் கிரிவலப் பாதையில் பழைமை வாய்ந்த ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கோயில் அருகே வியாழக்கிழமை மாலை யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், தம்பதி சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், பூா்ணாஹூதி, தீபாராதனை, காலகா்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, கலச பூஜைகள், சக்தி விநாயகா் மூலமந்திர ஹோமங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜைகள், கணபதி சகஸ்கர நாம பூஜைகள், விஷேச மூலமந்திர ஹோமங்கள், நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடு, விமான ஸ்தூபி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் கணேசன், தேவிகாபுரம், தொழிப்பேடு, ஆத்துரை, மூலபுரவடை, ஊத்தூரான்புரவடை, மலையாம்புரவடை என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு இன்னிசை நிகழ்ச்சி, பாட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை கற்றான்குளம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் ஏற்பாடு செய்திருந்தனா். விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தென்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யந்திர ஸ்தாபனம், தத்வாா்ச்சனை, நாடிசந்தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.