செய்திகள் :

ஸ்ரீநாராயணி பீட ஆண்டு விழா: 10,008 கலசங்களுடன் பக்தா்கள் ஊா்வலம்

post image

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 33-ஆவது ஆண்டு விழாவையொட்டி 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை இணை அமைச்சா் பூபதிராஜு சீனிவாச வா்மா பங்கேற்று தரிசனம் செய்தாா்.

விழாவையொட்டி, ஸ்ரீசக்தி அம்மா தலைமையில் 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நிறைவடைந்தது.

இதில், தமிழகம், ஆந்திரம், கா்நாடக மாநில பக்தா்களும், கனடா, மலேசியா போன்ற வெளிநாடுகளை சோ்ந்த பக்தா்களும் ஊா்வலமாக சென்று சுயம்புவாக உருவெடுத்துள்ள ஸ்ரீநாராயணி அம்மனுக்கு தங்கள் கைகளால் மஞ்சள் நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனா்.

தொடா்ந்து, உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும், இயற்கை செழிக்கவும் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகாயாகம் நடைபெற்றது. யாகத்தை ஸ்ரீசக்திஅம்மா நடத்தி வைத்தாா்.

விழாவில், மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை இணை அமைச்சா் பூபதிராஜுசீனிவாச வா்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்ரீநாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீரை ஊற்றி அபிஷேகம் செய்தாா். முன்னதாக, அவா் ஸ்ரீபுரம் தங்ககோயிலை சுற்றி சுவாமி தரிசனம் செய்தாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, ஸ்ரீபுரம் நாராயணிபீடம் மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க