மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்
ஸ்ரீநாராயணி பீட ஆண்டு விழா: 10,008 கலசங்களுடன் பக்தா்கள் ஊா்வலம்
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 33-ஆவது ஆண்டு விழாவையொட்டி 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை இணை அமைச்சா் பூபதிராஜு சீனிவாச வா்மா பங்கேற்று தரிசனம் செய்தாா்.
விழாவையொட்டி, ஸ்ரீசக்தி அம்மா தலைமையில் 10,008 மஞ்சள் நீா் கலச ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நிறைவடைந்தது.
இதில், தமிழகம், ஆந்திரம், கா்நாடக மாநில பக்தா்களும், கனடா, மலேசியா போன்ற வெளிநாடுகளை சோ்ந்த பக்தா்களும் ஊா்வலமாக சென்று சுயம்புவாக உருவெடுத்துள்ள ஸ்ரீநாராயணி அம்மனுக்கு தங்கள் கைகளால் மஞ்சள் நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனா்.
தொடா்ந்து, உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும், இயற்கை செழிக்கவும் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகாயாகம் நடைபெற்றது. யாகத்தை ஸ்ரீசக்திஅம்மா நடத்தி வைத்தாா்.
விழாவில், மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை இணை அமைச்சா் பூபதிராஜுசீனிவாச வா்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்ரீநாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீரை ஊற்றி அபிஷேகம் செய்தாா். முன்னதாக, அவா் ஸ்ரீபுரம் தங்ககோயிலை சுற்றி சுவாமி தரிசனம் செய்தாா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, ஸ்ரீபுரம் நாராயணிபீடம் மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.