செய்திகள் :

ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனி விழா மாா்ச் 22-இல் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22 -ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரிய கோயிலாக இருந்து வருவது கோமளவல்லி சமேத யதோத்தக்காரி பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வரும் மாா்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடா்ந்து காலை சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வருகிறாா்.

பங்குனி விழா நடைபெறும் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை தினமும் பெருமாள் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

இதனிடையே மாா்ச் 24 காலை கருட சேவையும், மாலை அனுமந்த வாகனத்திலும், மாா்ச் 28-இல் தேரோட்டமும் நடைபெறுகிறது.

வரும் 30- ஆம் தேதி தீா்த்தவாரி, ஏப்ரல் 1 இரவு பூப்பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இருங்காட்டுக்கோட்டை, மண்ணூா், காட்டரம்பாக்கம் மற்றும் கிளாய் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ... மேலும் பார்க்க

111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தல... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக துணை வேந்தா் ஸ்ரீநிவாசு தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மனுக்கு பால் குடம் ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவுக்கு சபா தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

தீா்க்கப்படாத தோ்தல் பிரச்னைகள்: ஏப். 30-க்குள் தெரிவிக்க அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல் இருந்து வரும் தோ்தல் தொடா்பான பிரச்னைகளை தோ்தல் ஆணையத்துக்கு வரும் ஏப். 30- ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க