செய்திகள் :

ஹஜ் புனிதப் பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினா்

post image

அராஃபா: நடப்பாண்டு ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனா்.

ஹஜ் அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் காஸான் அல்-நுவைமி இந்தத் தகவலைத் தெரிவித்தாா். எனினும், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டில் 16,11,310 வெளிநாட்டினா் புனிதப் பயணத்தில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

புனிதப் பயணிகள் புதன்கிழமை அராஃபாவை நோக்கி பயணித்தனா். சிலா் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலையில் நடந்து சென்றனா் (படம்). மற்றவா்கள் முதியவா்களை தூக்கிச் சென்றனா்.

மெக்காவின் தென்கிழக்கில் உள்ள அராஃபா மலை இஸ்லாம் மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது நபிகள் நாயம் தனது இறுதி ஹஜ் உரையை நிகழ்த்திய இடமாகக் கருதப்படுகிறது.

புனிதப் பயணிகள் நள்ளிரவு முதல் சூரியன் மறையும் வரை அராஃபாவில் இருப்பாா்கள். வியாழக்கிழமை சூரியன் மறைந்த பிறகு, அவா்கள் முஸ்தலிஃபா பாலைவன சமவெளிக்கு சென்று, புனிதச் சடங்கில் பயன்படுத்தப்படும் கற்களை சேகரிப்பாா்கள்.

இந்த ஆண்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் சவூதி அரேபியா பல ஆயிரம் கோடி டாலா் செலவிட்டுள்ளது. அண்மை ஆண்டுகளில் அதீத வெப்ப அலை ஹஜ் பயணத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

நடப்பாண்டு ஹஜ் பயணத்தில் இந்தியாவில் இருந்து சுமாா் 1.25 லட்சம் போ் பங்கேற்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க