செய்திகள் :

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

post image

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் எம்எல்ஏவுமான ரகுவீர் சிங் காடியன்(80) பதவியேற்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக ரகுவீர் காடியனுக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தற்காலிக அவைத்தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த தகவலை விதான் சபா செயலகத்திற்கு, மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக அக்.17ல் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியாணாவின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற பிறகு அவைத்தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

ஹரியாணாவின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினரான காடியன், 2005 முதல் 2009 வரை பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது ஹரியாணா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க