செய்திகள் :

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

post image

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாகியிருக்கிறார். கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக தனியாக வசித்து வந்த ஹிமானி வீட்டுக்கு அவ்வப்போது சச்சின் வந்து சென்றுள்ளார்.

அதுபோல பிப். 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு சச்சின் ஹிமானி வீட்டுக்கு வந்துள்ளார். அன்று இரவு அவர் அங்கு தங்கியிருந்த நிலையில்தான், மறுநாள் காலை இருவருக்கும் இடையே இதுவரை வெளிவராத விஷயத்துக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், சச்சின் ஒரு துப்பட்டாவால், ஹிமானி கையை கட்டி, மொபைல் சார்ஜரால், கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஜஜ்ஜார் மாவட்டத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர் என்றும் காவல்துறை விசாரணையில் நேற்று தகவல்கள் வெளியாகின.

ஹிமானி நர்வால் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சச்சினை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்தான், மொபைல் சார்ஜர் மூலம் ஹிமானியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பிப். 27 அன்று அவரது வீட்டுக்கு சச்சின் வந்துள்ளார். இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மொபைல் சார்ஜரைக் கொண்டு சச்சின், ஹிமானி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, அவரது நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, ஹிமானியின் ஸ்கூட்டரில் தனது மொபைல் கடைக்கு வந்து அனைத்தையும் வைத்துவிட்டு மீண்டும் ஹிமானி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சூட்கேசில், ஹிமானி உடலை வைத்து, அதனை ஆட்டோ மூலம் தில்லி பைபாஸ் சாலைக்கு பிப்.28ஆம் தேதி இரவு வந்துள்ளார். பிறகு, சூட்கேசுடன் பேருந்தில் ஏறி, சம்ப்லா பேருந்து நிலையம் வந்து இறங்கி, சற்று தூரம் நடந்து சென்று சூட்கேஜை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

கொலைக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும், இருவருக்குள்ளும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். கைதான சச்சின் கையில் கடித்த அடையாளம் இருப்பது குறித்து காவல்துறையினர் கேட்டபோது, ஹிமானி, தன்னைத் தற்காத்துக் கொள்ள போராடிய போது கடித்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், இவர்களுக்குள் எந்த விவகாரத்தில் சண்டை ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க

சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்ப... மேலும் பார்க்க